Indian Home Minister P Chidambaram answers questions during the press conference at the Congress headquarters in New Delhi on April 2, 2009. Chidambaram asserted that security would be priority during the elections. India holds its 15th parliamentary general elections in five phases on April 16, April 23, April 30, May 7 and May 13 and the new Parliament will be constituted before June 2, 2009. AFP PHOTO/ Manpreet ROMANA
Life History தலைவர்கள்

ப. சிதம்பரம்

பத்திரிக்கையாளர்களால் பிரபலமாக PC என்று அழைக்கப்படும் ப.சிதம்பரம் அவர்கள், சட்டப் பயிற்சி மேற்கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் வேலை செய்தார்.

அவர் காங்கிரஸ் கட்சிக்காரராக தனது அரசியல் தொழில்துறையை துவங்கினார். இதுவரை இந்திய நாட்டில்  உள்ள வர்த்தகம்  மற்றும் நிதி அமைப்புத் துறையில்  ஒரு பெரும் மாற்றத்தைக்  கொண்டு வந்தார். இந்தியா சிறிதாவது நன்றாக செயல்பட்டு,  உலகளவில் வருவாய்த்துறையில் போட்டியிடுகிறது என்றால், அதன் ஒரு பகுதியான பெருமை ப.சிதம்பரம் அவர்களையே சென்றடையும். அவருடைய கொள்கைகளும், நிபுணத்துவமும் அவரை முன்னால் நின்று ஊக்குவிக்க எந்த ஓர் இடையூறும் இல்லாமல் வழிவகுக்கச்  செய்கிறது. தொழில்ரீதியாக ப.சிதம்பரம் அவர்கள் வழக்கறிஞராக இருந்தாலும், தீவிர அரசியலில் அவர் வகித்த பங்கே அவரை மிக பிரபலமாக்கியது. நாட்டின் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்ற அக்கறை உள்ள சில அரசியல்வாதிகளில் ஒருவரான ப. சிதம்பரம் பற்றி இன்னும் அறிய மேலும் இதைப் படியுங்கள்.

பிறப்பு: செப்டம்பர் 16, 1945

இடம்: கானாடுகாத்தான், சிவகங்கை மாவட்டம் (தமிழ் நாடு, இந்தியா)

படிப்பு: வக்கீல்

ஆரம்பக்கால வாழ்க்கை:

செப்டம்பர்  மாதம் 16-ஆம் தேதி, 1945ல் பழனியப்ப செட்டியாருக்கும், லக்ஷ்மி ஆச்சிக்கும் மகனாக பிறந்தார் ப. சிதம்பரம். அவர் தனது குழந்தை பருவத்தை தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கானாடுகாத்தான் கிராமத்திலியே செலவிட்டார். அவர் நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டியார் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.  பின்னர்,  சென்னை பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரியில், தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் சென்று வணிக நிர்வாகத்தில் முதுகலை (MBA) பட்டம் பெற்றார். அவர் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியிலிருந்தும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். படிப்பைத் தவிர, ப.சிதம்பரம் அவர்கள் டென்னிஸ், பேட்மின்டன் மற்றும் சதுரங்கம் விளையாடுவதில் ஆர்வமுடையவராக இருந்தார்.

தொழில் துறை:

1968ல் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞையான நளினியை ப.சிதம்பரம் அவர்கள் திருமணம் செய்தார். 1969-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வக்கீலாக தன்னைப் பதிவு செய்து ஒரு வெற்றிகரமான சட்ட நிறுவனத்தையும் நிறுவினார். அவர் உச்ச நீதிமன்றத்திலும், இந்தியாவிலுள்ள பல உயர் நீதிமன்றங்களிலும் பயிற்சி மேற்கொண்டார். டெல்லியிலும், சென்னையிலும் அவருக்கென்று தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல நடுவர் தீர்ப்பு நடவடிக்கைகளில் தோன்றியிருக்கிறார். இலவச நிறுவனங்கள் மூலமாக தொழில் மற்றும் தடையற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி அமெரிக்காவில் படித்த இவர் 1960-ன் பிற்பகுதியில் கட்டளை பொருளாதாரத்திற்காக வாதாடினார். 1984 – ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் சிவகங்கை தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தியின் துணை மந்திரி ஆனார். பின்னர் அவர் பல்வேறு அரசாங்களில் வர்த்தக மற்றும் நிதி இலாக்காவின் பொறுப்பில் இருந்தார். 2004 -ல் நடந்த தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்ததன் காரணமாக ப.சிதம்பரம் அவர்கள் மீண்டும் நிதி அமைச்சரானார். 2008 ஆம் ஆண்டு, அவர் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் பல்வேறு முகவர்களை நிறுவி சட்ட பொறுப்பு மற்றும் ஒழுங்கை சீராக கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

பங்களிப்பு:

சமூகத்தில் 2008 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது, அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு  கடன் தள்ளுபடி வழங்க திட்டத்தைத் தீட்டினார். இந்திய பொருளாதாரத்தின் மொத்த தேவையை அதிகரிக்கும் ஒரு பங்கு கடன்கள் என்று அவர் அறிந்தார். இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலமாக மந்தநிலை பாதிப்பிலிருந்து, இந்தியாவை மீட்டு திறம்பட வளரச்செய்தார். எனவே, நம் நாட்டின் நிதி மற்றும் வர்த்தக துறையில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்தானது. 1996-97 க்கான “கனவு பட்ஜெட்டில்”, அவர் அரசாங்க செலவுகளில் கட்டுப்பாடு கொண்டு வந்து, ஒரு அதிகாரமற்ற நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஒரு லட்சிய வரி சீர்திருத்த திட்டத்தைத் தொடங்கினார்.

காலவரிசை:

1945: கானாடுகாத்தான் கிராமத்தில், தமிழ்நாட்டில் பிறந்தார்.

1969:  ஒரு வக்கீலாக பணியை தொடங்கினார்.

1984: அவர் அரசியலுக்கு வந்தார். மக்களவைக்கு முதல்முறையாக தமிழ்நாட்டின் சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1985: ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கத்தில், முதல் முறையாக துணை மந்திரி ஆனார்.

1986: அவர் மாநில அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

1991: அவர் வர்த்தக அமைச்சகத்தின் மாநில அமைச்சராக (தனி பொறுப்பு) ஆனார்.

1996:  அவர் காங்கிரஸிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸில் (TMC) சேர்ந்தார்.

1996: தேர்தலுக்குப் பிறகு, பி சிதம்பரம் கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து யூனியன் நிதி மந்திரி ஆனார்.

2008: தனது பதவியை விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிவராஜ் பாட்டீல் இருந்ததால், அவர் இந்திய உள்துறை அமைச்சர் ஆனார்.

About the author

Julier

16 Comments

Click here to post a comment