Business Technology

பருவமழைக்காக பிரத்யோக எமோஜியை வெளியிட்ட டுவிட்டர்

பிரபல சமூகவலைதளமான டுவிட்டர் பருவமழைக்காக பிரத்யோக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோடை காலம் முடிந்து பருவ மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் டுவிட்டர் பிரத்யோக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. நில நிறத்தில் குடை போன்ற புதிய எமோஜியை டுவிட்டர் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் பருவநிலை குறித்த செய்திகளை நெட்டிசன்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் இந்த எமோஜி வெளியிடப்பட்டுள்ளது

#Monsoon2017, #Monsoon, #IndiaRains, , #ChennaiRains ,#Baarish, #MumbaiRains, #DelhiRains, #BengaluruRains #HyderabadRains and #AhmedabadRains போன்ற ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் பயன்படுத்தும் போது அந்த எமோஜி தானாகவே தோன்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை தொடர்பாக இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் எமோஜி இதுவாகும்.