Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் – சிவகார்திகேயன் அதிரடி முடிவு

ஒரு நடிகராக, பாடகராக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ரஜினிமுருகன்’ படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இதற்கிடையில் ‘போத்தீஸ் ஜவுளிக்கடை விளம்பரம்’, த்ரிஷாவுடன் இணைந்து ‘ஐடிசி விவல் சோப்’ உள்ளிட்ட சில விளம்பர படங்களிலும் நடித்து வந்துள்ளார். பெருகி வரும் இவரது ரசிகர் கூட்டத்தைக் கண்ட சில விளம்பர நிறுவனங்கள் இவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க கேட்டுள்ளனர்.

பிரபல குளிர்பான நிறுவனமான கோலா தங்களின் விளம்பர படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளனர். ஆனால் கொக்கக் கோலா பானங்களில் விஷத்தன்மை உள்ளதால் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற பொருளின் விளம்பரங்களில் நடிக்க எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என உறுதியாக கூறிவிட்டாராம். பணத்துக்காக மக்களை ஏமாற்றும் நடிகர்கள் மத்தியில் சிவா கொஞ்சம் வித்யாசமாய் உள்ளார் .

இதனால் சிவா மக்கள் மனதில் நிலையான இடம் பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Exit mobile version