Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

பி.எஸ்.என்.எல். அதிரடி …விடிய விடிய இலவசமாக பேசலாம்

செல்போன் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் அழைப்புகளுக்கான கட்டணத்தையும், எஸ்.எம்.எஸ். கட்டணத்தையும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, கணிசமாக குறைத்து, மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல். இந்தியா முழுவதிலும் 2 கோடியே 80 லட்சம் தரைவழி டெலிபோன்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் 13 லட்சத்து 60 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனாலும், கடந்த 10 வருடத்தில் நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள்  சரண்டர் செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் டெலிபோன் சரண்டர் அதிகரித்து வருவதாலும், பிற நிறுவவங்களுடனான போட்டியை சமாளிக்கவும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் புதுப்புது திட்டங்களை அறிவித்தது.
இந்நிலையில் நிறுவனம் தனது அதிரடி கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது. அதாவது, பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் [லேண்ட் லைன்] இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளது.
Exit mobile version