Flash News Tamil

கறுப்பு பணத்தை மீட்கும் எண்ணம் தற்போதைய அரசுக்கு கொஞ்சம் கூட இல்லை

கறுப்பு பண விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால விசாரணை அறிக்கையை மே.12ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி கூறுகையில், ‘கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசோ, அல்லது நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ இதுவரை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வரும் எண்ணமே அருண் ஜேட்லிக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என கூறினார்.