News

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 21 வயது பெண் கைது

கேரளாவில் 17 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்ததாக 21 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், 17 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த குற்றத்திற்காக போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளம்பெண்ணைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டான்.போலீஸ் விசாரணையில் பேஸ்புக் மூலமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கோட்டயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.