Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

பிரபல பின்னணி பாடகருமான கிரிஷ் கதாநாயகனாக அறிமுகம்…!!!

கிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘புரியாத ஆனந்தம்  புதிதாக ஆரம்பம்’

நடிகை சங்கீதாவின் கணவரும், பிரபல பின்னணி பாடகருமான கிரிஷ், ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்துக்கு, ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில், கிரிஷ் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். விஜய்பாபு, ‘வெண்ணிலா கபடிக்குழு’ நித்தீஷ் மற்றும் புதுமுகங்கள் பலரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் பி.ஜி.முத்தையா, வெற்றி ஆகிய இருவரிடமும் உதவியாளராக இருந்த செந்தில் மாறன் ஆர். ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரஹைனா சேகர் இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், தம்பி செய்யது இப்ராகிம். இவர், ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் ஏ.எஸ்.இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்கிறார்.

படத்தை பற்றி டைரக்டர் தம்பி செய்யது இப்ராகிம் சொல்கிறார்:-

”எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முதல் காதல் இருக்கும். பெரும்பாலானவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்த தயங்குவார்கள். அப்படி காதலை சொல்ல தயங்கிய ஒருவரின் கதைதான் இது. படத்தின் முக்கிய காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே படமாக்கப்பட்டது.

கவிஞர் வாலி கடைசியாக பாடல் எழுதிய படம் இது. அதுவும் மரணம் சம்பந்தப்பட்ட பாடல்தான். படம் சென்னை, மதுரை, தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம், ராஜபாளையம் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது

Exit mobile version