Flash Indians News Tamil

முஸ்லிம் , கிறித்தவர்கள் கட்டாய கருத்தடை!!! பெண் சாமியின் மதவெறி பேச்சு !!!!

ஜின்ட் (அரியானா), ஏப்.13_ அரியானா மாநிலத்தில் ஜின்ட் பகுதியில் செய்தியா ளர்களை சந்தித்த அகில இந்திய இந்து மகாசபா வின் துணைத் தலைவர் சாமியாரிணி தேவா தாக் கூர் மதவெறி நஞ்சைக் கக்கியுள்ளார்.

நெருக்கடிநிலையை உருவாக்கி முசுலீம்கள், கிறித்தவர்களை கட்டாயப் படுத்தி கருத்தடையை செய்திட வேண்டும் என்றும், இந்து மத ஆண் கடவுள்கள் மற்றும் பெண் கடவுள் சிலைகளை மசூதி களுக்குள்ளும், சர்ச்சுகளுக் குள்ளும் வைத்திட வேண் டும் என்று இந்து மகா சபையைச் சேர்ந்த தேவா தாக்கூர் எனும் பெண் சாமியாரிணி மத வெறி நஞ்சைக் கக்கியுள்ளார்.

மக்கள் தொகையைப் பெருக்கி இந்துக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு கருத்தடையைக் கட்டாயப் படுத்தி செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய இந்து மகாசபா துணைத் தலை வர் பெண் சாமியாரிணி தேவா தாக்கூர் கூறும் போது, நாளுக்கு நாள் முசுலீம்கள் மற்றும் கிறித் தவர்களின் மக்கள் தொகை பெருகிய வண்ணம் உள் ளது. அதற்கு முடிவுகட்டுவ தற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்களை கட்டாயப்படுத்தி கருத் தடை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் எண்ணிக்கை பெருகாமல் இருக்கும் என்று கூறினார்.

இந்துக்களுக்கு அறிவு ரையாகக் கூறும்போது, உலக அளவில் சரியான விளைவுகள் ஏற்படுத்த வேண்டுமானால் இந்துக் கள் அதிக எண்ணிக்கை யில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, இந்துக்களின் கடவுளர் சிலைகளை மசூதிகளிலும், சர்ச்சுகளி லும் வைத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பெண் சாமியா ரிணிதான் அரியானா மாநிலத்தில் தியாகி(?) நாதுராம் கோட்சேவுக்கு சிலை அமைப்பதற்கு தீவிர மான ஆதரவைத் தெரி வித்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.