Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

வெடிக்கத் தயாராகும் எரிமலை!

சிலியிலுள்ள கல்புகோ எரிமலை 40 வருடத்திற்கு பின் வெடிக்கத் தயாராகியுள்ளது. 

இந்த எரிமலைக் குமுறலால் தென் துறைமுக நகரான புயர்ரோ மொன்ட்டுக்கு அருகே இராட்சத புகைமூட்டம் எழுந்ததையடுத்து அந்த எரிமலையை சூழ 12.5 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் மக்களை இடம்பெயர உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலியிலுள்ள 90 உயிர்ப்புள்ள எரிமலைகளில் மிகவும் அபாயகரமாக விளங்கும் 3 எரிமலைகளில் ஒன்றாக கல்புகோ விளங்குகிறது. சிலிய தலைநகர் சன்தியாகோவிலிருந்து 620 மைல் தொலைவில் மேற்படி எரிமலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலை இதற்கு முன் 1972 ஆம் ஆண்டு குமுறியது.
Exit mobile version