Flash News Sports Tamil

விளையாட்டு வீராங்கனைகளின் தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறை

கேரள மாநிலத்தில்  உள்ள நீர் விளையாட்டு பயிற்சி மைய விடுதியில் விஷக் காயை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற 4 விளையாட்டு வீராங்கனைகளின் தற்கொலைக் கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஒரே கடிதத்தை எழுதி அதில் நான்கு பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில், நாங்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட, மூத்த வீராங்கனைகளால் பெரிதுப்படுத்துப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது மட்டும் அல்லாமல் மேலும் சில விஷயங்களும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், துன்புறுத்தலோ, வன்முறையோ நடந்ததாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.