Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஆர்.கே.நகரில் விஜயகாந்த் நாளை பிரசாரம்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் நாளை பிரசாரம் தொடங்குகிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன் மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

இதனால் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் தொடங்குவது தாமதமானது. அவர் ஆர்.கே.நகரில் நாளை பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து நாளை (9-ந்தேதி) அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்காளப் பெருமக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று 38, 39, 40, 41, 42, 43, 47 ஆகிய வட்டங்களில் வீதி, வீதியாக கழக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Exit mobile version