political

டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:
ஓட்டுநர் உரிமம் பெறுவது மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை 4 மடங்கு மத்திய அரசு உயர்த்தியது. அனைத்து விதமான வாகனங்களுக்கும் தனிநபர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்களை தற்போதுள்ள சுமார் 320 ரூபாய் என்ற அளவில் இருந்து ரூ.1,200 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இந்நிலையில், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற மத்திய அரசின் ஆணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  எந்த வித அதிகாரமும் இன்றி புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஓட்டுநர் உரிம கட்டணங்களை அதிகரிக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. கடந்த 2001-2002-ம் ஆண்டில் கடைசியாக ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.
மேலும், வாகனம் விற்கும் போது ஆட்சேபனையில்லா சான்று தாமதமானால் அபராதம் விதிக்கும் விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.