Sports

பேட்மிண்டன் அகாடமிக்கு வீரர் – வீராங்கனைகள் தேர்வு

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் செயல்பட்டு வரும் பேட்மிண்டன் அகாடமிக்கு இந்த ஆண்டுக்கான வீரர்-வீராங்கனைகள் தேர்வு அங்குள்ள பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கில் வருகிற 9-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.

இதில் சேர விரும்பும் வீரர்-வீராங்கனைகள் 1-1-2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். அகாடமிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்-வீராங்கனைகளுக்கு தினசரி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

அத்துடன் அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடை உள்ளிட்ட வசதிகள் இலவசமாக அளிக்கப்படும். இந்த தகவலை சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாக விளையாட்டு அதிகாரி வீரபத்ரன் தெரிவித்துள்ளார்.