Story

வேஷங்கள் நிலைப்பதில்லை…

ஒரு ஏரியில் நிறைய மீன்களும்

பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில்
நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும்
வாழ்ந்து வந்தன.
பருவமழை பொய்த்து ஏரி வற்ற
ஆரம்பித்ததும் இடத்துக்குச்
சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக்
கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும்
இடத்திற்கு மற்றொரு இனம் போகக்
கூடாது. மீறினால் எதிரியின் கையில்
சரியான உதை கிடைக்கும்
இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும்
தந்திரமாக வேஷம்
போட்டு ஏரி முழுவதும்
சுற்றி வந்து கொண்டிருந்தது.
பாம்புகள் இடத்திற்குப் போகும்
போது விலாங்கு தன் நீண்ட உடலையும்
பாம்பு போன்ற தலையையும்
வைத்து தான்
ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.
மீன்களின் இடத்திற்குப் போகும்
போது உடலைச் சுருட்டி மீன் போன்ற
துடுப்புகளையும் வாலையும்
காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக்
கொள்ளும்.
இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக்
கொண்டு இரண்டு இடங்களிலும்
உணவு பெற்று ஏரி முழுவதும்
சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.
வெயில் காலம் அதிகமானது.
ஏரி மேலும் வற்றியது. பாம்புக்
கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள்
இடங்களை நெருக்கியும் குறுக்கியும்
அமைத்துக் கொண்டே வந்தன.
ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன்
இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக்
கொள்ளும் தூரத்தில் அமைக்கும்
நிலை வந்தது.
அப்போது மீனாக விலாங்கு வேஷம்
போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின.
பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள்
கடித்துக் குதறின.
“நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல”
விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை.
விலாங்கு “முதலிலேயே உண்மையைச்
சொல்லியிருக்கலாமோ”
என்று நினைத்துக்
கொண்டு செத்தே போனது.