Story Tamil

மிருகங்கள் கலாய்க்கும் நிலையில் மனிதர்கள்,…

குதிரையும், கழுதையும் ஒன்றுக்கொன்று பேசி கொள்கிறது.
குதிரை- நான் பாய்ந்து ஓடினால் பூமியே அதிரும், தெரியுமில்லை.
கழுதை- நான் எட்டி உதைச்சால் எட்டு பல்லாவது கொட்டும். தெரியுமில்லை.
குதிரை- ரொம்ப அழகாக இருக்கும் பெண்களை அரபு குதிரைனு சொல்வாங்க தெரியுமில்லை
கழுதை- நிறைய மனிதர்கள் உருப்படாத கழுதைனு பேர் வாங்கின்டு இருக்காங்க, தெரியுமில்லை..
குதிரை- சரி, இந்த மனிதர்கள் மாதிரி உருப்படாத பெருமை பேச்சு வேண்டாம். வா, உருப்படற வேலையை பார்ப்போம்.
மிருகங்கள் கலாய்க்கும் நிலையில் தான் இன்று பல மனிதர்கள், இருக்கிறார்கள். வெற்றி பேச்சு பேசாமல் வெட்டி பேச்சு பேசி கொண்டிருக்கிறார்கள்.