Technology

ரூ.2.30 கோடி விலையில் புதிய ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

ரூ.2.30 கோடி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?..

#VertuSignatureCobra என்ற பெயரில் துருக்கி தொழிலதிபர் ஒருவர் இந்த ஸ்மார்ட்ஃபோனை வடிவமைத்துள்ளார். நாமெல்லாம் ரூ.10,000 விலைக்கு ஃபோன் வாங்கவே, யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில், இத்தகைய அதிகபட்ச விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அலிபாபா ஆன்லைன் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும் சிக்னேச்சர் கோப்ரா ஃபோனை வாங்க வேண்டுமெனில், முன் பணமாக, ரூ.10000 செலுத்த வேண்டும். அதன்பிறகே, நீங்கள் அதனை வாங்கும் தகுதியை எட்டுவீர்கள்.

இதன் சிறப்பம்சம், பாம்பு சுற்றிக்கொண்டது போல, மரகத கற்கள் முன்புறமும், பின்புறமும் இணைத்து, வடிமைக்கப்பட்டுள்ளன. எனினும், கூடுதல் சிறப்பம்சங்கள் பற்றிய விவரம் கிடைக்கப் பெறவில்லை.

சிக்னேச்சர் ஃபோனின் உதிரிபாகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டு, ஒருங்கிணைப்பட்ட பிறகே, சீன இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.