Cinema

நீயா, நானா பார்த்துவிடுவோம்: தேர்தல் வெற்றிக்கு பின் விஷால் பேட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொருளாளர் உள்ளிட்ட இதர பதவிகளுக்கு பெரும்பாலும் விஷால் அணியை சேர்ந்தவர்க்ளே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளரிகளிடம் விஷால் பேசியதாவது:-
தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவரும் நன்றி. எங்கள் வெற்றி அடுத்த 2 ஆண்டுகள், சினிமாவிற்கு பொற்காலமாக அமையும். தயாரிப்பாளர் சங்கள் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும்
மாற்றம் வர வேண்டும் என்றால் அதனை யாராலும் தடுக்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனுக்காக, பழி வாங்கும் நடவடிக்கைகாக இந்த வெற்றி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்களின் பிரச்சனைகள் தீர்வு காண விரும்பி இந்த வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.
அத்தனை முதலாளிகளுக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியவை தடையில்லாமல் கிடைக்கும். பதவியேற்றதும் விவசாயிகள்,
தயாரிப்பாளர்களுக்காக இரண்டு அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.
திருட்டு விசிடி விவகாரத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். தற்போது பதவிக்கு வந்துள்ளேன். நீயா, நானா பார்த்துவிடுவோம்(திருட்டு விசிடிகாரர்கள்).
இவ்வாறு கூறினார்.