Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தமிழ் சேனல், சினிமாக்களுக்கு தடை

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும், நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, தமிழக விவசாயிகள் வரும் 28ம் தேதி பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதே நாளில், கர்நாடகாவில் உள்ள தமிழ் சேனல்கள் இயங்கக் கூடாது என்றும், தமிழ் திரைப்படங்கள் திரையிடக்கூடாது என்றும் கன்னட சலுவலி தலைவர் வாட்டாள் நாகராஜ் மிரட்டி உள்ளார். மேலும், பெங்களூருவில் உள்ள மைசூரு பேங்க் என்ற இடத்தில் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Exit mobile version