political

கவுதம் கம்பீர் ஆவேசத்துக்கு இதுதான் காரணம்!

‘நம் ராணுவ வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் நூறு ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும்’ என காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தாக்குதல் குறித்து ட்விட்டரில் கவுதம் காம்பீர் ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார்.

காஷ்மீர் ஸ்ரீநகரில் சமீபத்தில் தேர்தல் நடந்து வந்த சமயம் ஓட்டுப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் ராணுவ வீரர்களை ஜிகாதிகள் சிலர் தொடர்ந்து தாக்கிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. இந்த வீடியோ காட்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’நம் வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் நூறு ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். காஷ்மீரை பிரிக்க நினைப்பவர்கள் வெளியேறுங்கள். காஷ்மீர் எங்களுடையதே’ என ஆவேசமாக கூறியுள்ளார்.

அதேபோல் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் வீரர்களை இவ்வாறு செய்திருக்கக்கூடாது. இந்தக் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.