Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கொடநாடு காவலாளி கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின் பேட்டி

திருவாரூர்:

தி.மு.க. செயல் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று திருவாரூர் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். கொட நாடு எஸ்டேட் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெட்டுள்ளதே கொடநாடு காவலாளி கொலைக்கு உதாரணமாகும். விவசாயிகளின் நலனுக்காகவே நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

Exit mobile version