political

தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா?: நடிகர் ஆனந்தராஜ் கேள்வி

கோவை:

நடிகர் ஆனந்தராஜ் இன்று மதியம் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

ஒரே ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி செலவு செய்துள்ளனர். தினகரன் தவிர வேறு யாராவது நின்றிருந்தால் இந்த அளவு செலவு செய்திருப்பார்களா?

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது டி.டி.வி.தினகரன் பேட்டி மூலமே வெளிப்படுகிறது.

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வுக்கு பெரிய ஆதரவு அளித்திருக்கும் நிலையில் இங்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மக்கள் வருத்தத் தினை போக்க நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஒரு குடும்ப கட்சியாக இருக்க கூடாது. நான் இதுவரை எந்த அணியிலும் இல்லை. ஆட்சியை மக்களிடம் கொடுத்து விட வேண்டும். அ.தி.மு.க.வில் மாற்றம் வருவதற்கான சூழல்கள் தெரிகின்றன.

இயக்குனர் கவுதமன் சென்னை கத்திப்பாரா பாலத்தில் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது போன்ற போராட்டங்கள் மக்களுக்கு இடையூறாகவே இருக்கும்.

தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்பதே யாருக்கும் தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

About the author

Julier