Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக ஓ.பி.எஸ். அணி சார்பில் கடந்த 6-ந்தேதி கொருக்குப்பேட்டை பாரதி நகர் மீனம்மாள் நகர் சந்திப்பு பகுதியில் பிரசாரம் செய்யப்பட்டது.

அப்போது ஜெயலலிதா மெழுகு பொம்மையுடன் சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்பட்டது. சவப்பெட்டியின் மீது தேசியக் கொடியை போர்த்தி இருந்தனர். இதற்கு தேர்தல் அதிகாரி ஆட்சேபம் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரசாரம் செய்யக்கூடாது என்று கூறினார். இதையடுத்து பிரசாரம் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

சவப்பெட்டி மீது தேசிய கொடியை போர்த்தி பிரசாரம் செய்து தேசிய கொடியை அவமதித்ததாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா. பாண்டியராஜன், தமிழ்ச்செல்வி, குப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Exit mobile version