Technology

இனி ஆண்ட்ராய்டுக்கு வேலையில்ல; வந்துருச்சு புது ஓ.எஸ்

உலகளவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு உள்ளது. இது பயன்படுத்துவோருக்கு எளிதாக இருப்பதாலும், இலவசமாகவும், குறைந்த விலை போன்களில் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் அதிக நபர்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது.

அதோடு பல்வேறு புதிய வசதிகளை கொடுப்பதோடு, புதுப்புது அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பதால் அனைவராலும் விரும்பப் படுகிறது.

கூகுள் நிறுவனம் மொபைல் போனில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு (Operating System-OS)பதிலாக புதிய ஓ.எஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனம் மிக ரகசியமாக புதிய OS உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதன் யூசர் இண்டர்பேஸ்க்கு ஆர்மடில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் OS க்கு பெயரிடப்படவில்லை.

கூகுளின் இந்த புதிய OS, புஜ்சியாவை அடிப்படையாக கொண்ட Ars Technica என்ற நிறுவனத்தின் யோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது

இந்த OS புதிய மொபைல் போன்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமையும் என கூறப்பட்டுள்ளது. சிறிய கம்ப்யூட்டர் போல செயல்படும் என்பதோடு, அதன் வேகம் அசாதரணமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த OSன் முதல் பக்கத்தில் நாம் எப்போதும் பயன்படுத்திவரும் ஆண்ட்ராய்டு போன் போல நம் புகைப்படம் வைத்தல், தேதி, நேரம், ஆகியவற்றோடு, நாம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளும் வசதி, பேட்டரி நிலை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் புதுவித டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதில் கணிணியைப் போல இரு வேறு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நடைப்பெறும் IO 2017 கூகுள் கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.