Cinema

இந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா?

சென்னை: விக்ரம் பிரபு தாடியும், மீசையுமாக அலைவதின் காரணம் தெரிய வந்துள்ளது. விக்ரம் பிரபு சில நாட்களாக தாடியும், மீசையுமாக சுற்றுகிறார். நடிகை சமந்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் விக்ரம் பிரபுவுக்கு என்னாச்சு ஏன் இப்படி தாடியுடன் இருக்கிறார், ஏதாவது பிரச்சனையா என்று நினைத்தனர்.

விக்ரம் பிரபு தாடி வைத்தது கவலையில் இல்லையாம் புதுப்படத்திற்கான புது லுக்காம். அதனால் அவருக்கு பிரச்சனையோ என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நெருப்புடா. அந்த படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு துறை வீரராக வாழ்ந்திருந்தார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. சினிமா வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகஜம் என்பதை புரிந்து கொண்ட அவர் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.