Uncategorized

வியக்க வைக்கும் #விஜய் சேதுபதி,நிமிர்ந்து நிற்கும் #புறம்போக்கு

சமீபத்தில் வெளிவந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் கதைகருவுடன் இருந்தாலும் திரைகதை முழுவதும் சிறைச்சாலையை மையபடுத்தி வருவது போல படத்தின் முன்னோட்ட காட்சிகள் வந்ததால் மக்களிடையே எதிர்பார்ப்பு குறைவாகவே  காணப்பட்டது.அனால் விஜய் சேதுபதி தனது தத்ரூபமான நடிப்பால் படத்தின் எதிர்பார்ப்பை காட்டு  தீ போன்று பரவ செய்துள்ளார்.படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தனது தோளில் தூக்கி நிறுத்தி உள்ளார்  விஜய் சேதுபதி .ஜனாதிபதி அனால் தூக்குதண்டனையை ரத்து செய்யலாம் என எண்ணி மனுதாக்கல் செய்தேன் என கூறுவதில் நகைச்சுவையை காட்டி உள்ளார் .காளி சிலை முன்பு நின்று கருணையுடன் பேசும்போது நம் நெஞ்சங்களை கவர்கின்றார் .இறுதியில் விருப்பமில்லா வேலையை செய்தல் மனம் என்ன பாடு படும் என்பதை உணர்த்த ஒரு பைத்தியகார வேடத்தில் வந்து தனது நடிப்பை நிலை நாட்டி உள்ளார் .Puram1