Entertainment Story Tamil

கோபப்படுத்துவதை விட,சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது…

சிங்கமும் கழுதைப்புலியும்
பசுவைப் பிடித்து வைத்திருந்தன.
ஒரு நாள் சிஙகம் பசுவைக்
கொன்றது. கழுதைப்புலி தன்
குட்டியை சிங்கத்திடம்
அனுப்பி தன் பங்கைக்
கேட்டது. கழுதைப்புலியின்
பங்காக பசுவின் குடலை மட்டும்
கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக்
கொண்டு வந்தாய்? அரைவாசிப்
பங்குதானே நமக்கு உரியது?”
என்று கேட்டது.
குட்டி கழுதைப்புலி சொல்லியது:
“நான் சின்னப்பயல். பெரியவர்கள்
கொடுப்பதைத்தான் கொண்டு வர
முடியும். நான்
எப்படி சிங்கத்தோடு விவாதிக்க
முடியும்”.
அதைக்கேட்டு கோபமான
கழுதைப்புலி அந்தக்
குடலோடு சிங்கத்தைப் பார்க்கப்
போனது. சிங்கம்
உணவை உண்டு குகைக்குள்
ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது.
கழுதைப்புலி வந்ததைக்
கண்டு கண்களை அச்சமூட்டும்
வகையில் வைத்திருந்தது. “ஏன்
இங்கே வந்தாய்?” –
கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த
கழுதைப்புலி தற்போது தன்
எண்ணத்தை மாற்றிக்கொண்டு
பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள்
குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி,
ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க
முடிவு செய்து விட்டோம்”.
குடலை சிங்கத்திடம்
கொடுத்து விட்டு திரும்பிய
கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது:
“பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள்
குடலையும்
கொடுத்து விட்டு வருகிறீர்களே?”
“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக
இருந்தது.
அதைக்கண்டு நடுங்கி விட்டேன்.
எனவே எனது பங்கையும்
கொடுத்துவிட்டுப்
பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம்
நன்மைக்காக” என்றது தாய்
கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக்
கோபப்படுத்துவதை விட
அவர்களை சாந்தப்படுத்துவதே
பாதுகாப்பானது.