Entertainment Flash News Sports Tamil

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி மோதியது. இந்த போட்டியின் போது மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை ரசிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மித்தும், மெக்கல்லமும் மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சை திணறடித்துவிட்டனர். பவர்பிளேவான முதல் 6 ஓவர்களில் மட்டும் இந்த ஜோடி 90 ரன்களை குவித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட 2வது அதிக ரன்கள் இதுதான். இதற்கு முன் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் சென்னை அணி பவர் பிளேவில் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தது.

இந்தியா முழுவதும் ஃபேஸ்புக் ரசிகர்களின் அதிக ஆதரவு யாருக்கு இருக்கிறது என்று ஒரு புள்ளி விபரம் வெளியிடப்பட்டது. அதில் சென்னை அணிக்குதான் ரசிகர்களிடையே அமோக ஆதரவு காணப்பட்டது. சென்னை அணி இந்தளவுக்கு இந்திய மக்களின் மனதை கொள்ளையடிக்க காரணமாக உள்ளவர்கள் இந்திய அணியின் கேப்டன் தோனி, நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரன்டென் மெக்கல்லம், ஸ்மித், சுரேஷ் ரெய்னா, பிராவோ, அஸ்வின் என அணியில் இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த வீரர்களே இடம் பெற்றுள்ளதால் சென்னை அணிதான் இந்திய மக்களின் மனதை கவர்ந்த அணியாக உள்ளது.