Entertainment World

இஸ்ரேலில் அந்தரத்தில் நின்று ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாயஜால மனிதர்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் மாயாஜாலக் கலைஞர் ஒருவர் அந்தரத்தில் நின்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள வணிக வளாகத்தில் ஹெசி டீன் என்ற மாயாஜாலக் கலைஞர், அங்கு உள்ள சுவர் ஒன்றில் எந்த கைப்பிடியும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியவாறே நின்றார்.

இதனை அங்கு உள்ள நடைபாதை மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர். இதே போல் அந்தரத்தில் தொங்கியவாறே அவர் ஐந்து மணி நேரம் நின்றார். தற்போது தான் முதன்முறையாக காயங்கள் ஏதுமின்றி இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளதாக ஹெசி டீன் தெரிவித்துள்ளார்.