political

தென் இந்தியர்கள் குறித்து தரக்குறைவான கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய தருண் விஜய்

புதுடெல்லி:
நொய்டாவில் போதைப் பொருள் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்வதாக ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் தரப்பில் இனவெறி மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் என கூறப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக அல்-ஜசீரா நடத்திய விவாதத்தில் பா.ஜனதா தலைவர் தருண் விஜய் கலந்துக் கொண்டு பேசினார். ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக பேசிய தருண் விஜய் பேசியதாவது:-
நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. நீங்கள் இந்தியரோ அல்லது வெளிநாட்டவரோ. ஆனால் ஒட்டுமொத்த தென் இந்தியாவை பற்றி உங்களுக்கு தெரியும். அங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளது. அங்கு கறுப்பு நிறத்தவர்கள் தான் உள்ளனர்.
அதனால், நாங்கள் இனவெறியர்களாக இருந்திருந்தால், நாங்கள் ஏன் தென் இந்திய கருப்பர்களுடன் இணைந்து வாழ வேண்டும்? நீங்கள் எங்கள் மூதாதையர்களையும், அவர்களது வரலாற்றையும் மறுக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.
தருண் விஜய் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்ததுள்ளது.
இதனையடுத்து, தன்னுடைய கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு உள்ளது என தருண் விஜய் விளக்கம் தெரிவித்து உள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் மக்களின் கோபமான பதிவுகளுக்கு ரீடுவிட் செய்து வருகிறார், அப்போது தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பும் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் மாறுபாடுகளை உள்ளடக்கிய கலாச்சாரத்தில் கருப்புநிற கிஷ்ணரை வழிபாடு செய்கிறோம்,
முதலில் நாம் இனவெறியை எதிர்த்தோம், பிரிட்டன் ஆட்சி காலத்தில் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். யாருடனும் நாம் இனவெறி கொண்டிருக்கவில்லை என விளக்கம் அளித்து உள்ளார். மேலும் டுவிட் செய்கையில் தேசத்தின் பலபகுதியில் நாம் பலதரப்பட்ட மக்களை கொண்டு உள்ளோம், நிறத்திலும், அவர்களுக்கு எதிராக நாம் எப்போதும் பாகுபாடு
காட்டவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
என்னுடைய கருத்தை தெரிவிக்க என்னுடைய வார்த்தை போதுமானதாக இல்லாமல் இருந்திருக்கலாம், வருந்துகிறேன். என்னுடைய
கருத்தை மீறி நான் மாறுபாடுடன் பேசியதாக உணர்கின்றவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என கூறிஉள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் குஷ்பு பேசுகையில், தருண் விஜய் கருத்து வினோதமானது மற்றும் பொறுப்பற்றது. நிறம் எங்கிருந்து
வந்தது. தருண் விஜயிடம் இருந்து வந்த இந்த கருத்தானது அதிர்ச்சியளிக்கிறது, நிறத்தை பார்ப்பதை நிறுத்தவேண்டிய நேரம்,” என கூறிஉள்ளார்.
கனிமொழி பேசுகையில் இது தேசவிரோத கருத்தாகும் என கூறிஉள்ளார். “பாரதீய ஜனதா அவருக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கும் என நம்புகின்றேன்,” என கூறிஉள்ளார்.