Science

மனிதர்களின் மூளையில் காணப்படும் விசேட இயல்பு ஒன்று குரங்குகளிலும் கண்டுபிடிப்பு

உலகிலுள்ள ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவமாக இயல்புகளை கொண்டு விளங்குகின்றான்.

இவ்வாறு கூறுவதற்கு பிரதான காரணங்களாக மொழியைக் கையாளல் மற்றும் விழிப்புணர்வு என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன.

எனினும் நாளுக்கு நாள் மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள் ஊடாக மனிதனின் தனித்துவத் தன்மை இல்லாது போகின்றது.

காரணம் ஏனைய விலங்குகளிலும் அவ்வாறான சிறப்பியல்புகள் காணப்படுகின்றமை ஆகும்.

அவ்வாறே தற்போது மற்றுமொரு மனித இயல்பு குரங்குகளிடமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது.

இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக நியூயோர்க்கிலுள்ள Rockefeller பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை FMRI (Functional Magnetic Resonance Imaging) முறையில் ஸ்கான் செய்து பார்த்த போதே இவ் உண்மை வெளியாகியுள்ளது.